: தமிழ் வழியில் பயின்றாலும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும் என, இந்திய அளவில் ஐ.ஏ.எஸ். தேர்வில் 15-ம் இடம் பெற்றுள்ள மாணவி மு. கனகவல்லி கூறினார்.
ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவில் அகில இந்திய அளவில் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ரயில்வே லைன் தெருவைச் சேர்ந்த மு. கனகவல்லி 15-ம் இடம் பெற்றுள்ளார்.
திருச்சியில் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் அவர் தொலைபேசியில் அளித்த பேட்டி:
நேர்முகத் தேர்வில் 3 முறை வெற்றி கிடைக்காத போதிலும், மனம் தளராமல் 4-வது முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். இதன் மூலம் கடின உழைப்பால் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்தேன்.
நான் முதல் முறையாக அரசுப் பணியில் தலைமைச் செயலகத்தில் உதவியாளராக தேர்வு செய்யப்பட்டேன். பின்னர், வணிக வரித் துறையில் உதவி வணிக வரி அலுவலராக பணியாற்றினேன். தற்போது ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் ஒரு பிரதிநிதியாக நான் கலந்து கொண்ட போது இருந்த தன்னம்பிக்கையை விட, அரசுப் பணியில் கிடைத்த அனுபவத்தின் மூலம் தைரியமாக நம்பிக்கையுடன் தேர்வு எழுதினேன். வெற்றி கிடைத்தது.
ஐஏஎஸ் தேர்வில் பொது நிர்வாகம் மற்றும் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்து தேர்வெழுதினேன்.
நான் கிராமத்து சூழலில் தமிழ் வழியில் அரசுப் பள்ளியில் பயின்றேன். ஐஏஎஸ் தேர்வை ஆங்கில வழியிலேயே எழுதினேன். தமிழ் வழியில் பயின்றாலும் ஐ.ஏ.எஸ். ஆகலாம். எனக்குக் கிடைத்த பதவியின் மூலம் மக்களுக்கு அரசின் திட்டங்கள் எளிதில் கிடைக்க பாடுபடுவேன். அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருப்பேன் என்றார் அவர்.
காருகுறிச்சி அரிஜன தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற அவரது தந்தை
ஏ. முத்துக்குமார் (63) கூறியதாவது:
நெசவாளர் குடும்பத்தில் பிறந்த நான், என் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தேன். கனகவல்லி 10-ம் வகுப்பு, பிளஸ்-2வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார். பி.இ. வேளாண் பாடத்தில் 84 சதவீதம் மதிப்பெண் பெற்றார் என்றார் அவர்.
இம்மாதம் 23-ம் தேதி நாகர்கோவிலைச் சேர்ந்த பொறியாளர் தனேஷ் ஜனார்த்தனனுக்கும், கனகவல்லிக்கும் திருமணம் நடைபெறுகிறது.
கனகவல்லியின் மூத்த சகோதரி ஜான்சி சென்னையில் பணி செய்கிறார். 2-வது சகோதரி மரகதவல்லி திருநெல்வேலி பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
தம்பி செந்தில்நாதன் பி.இ. முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார். பிகாம் ஐசிடபிள்யூ படித்துள்ள தங்கை நாகேஸ்வரி அரசு கருவூலத் துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு தங்கை அனுஷா, அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., படித்து வருகிறார். இன்னொரு தங்கை கிருத்திகா ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பி.எஸ்ஸி., 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
Harrah's Cherokee Casino & Hotel - Dr.MCD
ReplyDeleteHarrah's Cherokee Casino & Hotel. 강릉 출장샵 777 울산광역 출장안마 Casino Parkway, Cherokee, NC 28719. (800) 522-8783 ext. 877-6247 Website, http://www.tripadvisor.com/harrahs-cherokee-casino Rating: 3.5 · 논산 출장샵 15,940 이천 출장샵 reviews · Price range: $$ (Based on Average Nightly Rates for a Standard Room from our Partners)What are some of the property amenities at Harrah's Cherokee Casino & Hotel?Which 제주도 출장마사지 room amenities are available at Harrah's Cherokee Casino & Hotel?